நாளை சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..

 
வேலைவாய்ப்பு

சென்னையில் நாளை (ஜூன் 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியை உருவாக்க புதிய இயக்கம்! – ராமதாஸ் அறிவிப்பு

சென்னையில் நாளை  20 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறவுள்ளதாக ,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ்  அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் நாளை (ஜூன் 10) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சொன்னா நம்புங்க! மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும்…..

இந்த முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 வரை நடைபெற உள்ளது. இதில் 30 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.