ஹோம்வொர்க் ஏன் செய்யல? யூகேஜி சிறுவனை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை!!

 
tn

வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த மாணவனை அடித்த ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு இளவரசி என்ற மனைவியும் சர்வின் என்ற மகனும் உள்ளார்.  சர்வின் ராஜபாளையம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.

tn

இந்த சூழலில் நேற்று பள்ளிக்கு சென்ற சர்வின் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று கூறி  அவரது ஆசிரியை சத்யா சர்வினை பிரம்பால் அடித்ததாக தெரிகிறது.  அதனால் கை மற்றும் உடல் முழுவதும் சர்வினுக்கு காயம் ஏற்பட்டது.  இதையடுத்து மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று சர்வினைக் கண்ட அவரது பெற்றோர்,  குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர்.

tn
உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் சதீஷ் - இளவரசி தம்பதி புகார் அளித்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல் துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பள்ளி ஆசிரியை சத்யா பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் பள்ளி ஆசிரியை சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.