சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக பிரியா அறிவிப்பு!!

 
tn

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக பிரியா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுகிறார்.

tn

மதுரை மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக இந்திராணி, திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அன்பழகன், துணை மேயர் வேட்பாளராக திவ்யா தனகோடி, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக சரவணன் ,துணை மேயராக கேஆர் ராஜு ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

tn

அதேபோல் கோவை மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக கல்பனா, துணை மேயர் வேட்பாளராக வெற்றிசெல்வன் ,சேலம் மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக ராமச்சந்திரன், திருப்பூர் மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக தினேஷ்குமார் ,ஈரோடு மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக நாகரத்தினம் ,துணை மேயர் வேட்பாளராக செல்வராஜ் ஆகியோர்போட்டியிடுகின்றனர்.

tn

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஜெகன், துணை மேயர் வேட்பாளராக ஜெனிட்டா  செல்வராஜ் , ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக உதயகுமார், தாம்பரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் வேட்பாளராக காமராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மகாலட்சுமி யுவராஜ், வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆனந்தகுமார், துணை மேயர் வேட்பாளராக சுனில் ,கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக சுந்தரி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமநாதன் ,துணை மேயர் வேட்பாளராக அஞ்சுகம் பூபதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.