லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது - தமிழிசை கிண்டல்

 
tamilisai

லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவத்தை ஒப்பிட்டு கிண்டலாக பேசியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள லிப்டில் மாட்டிக்கொண்டார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அவர் அவசர வழி கதவு வழியாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாப பேசப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நினைவுகூர்ந்துள்ளார்.  

Ma subramanian

புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: விமானத்தில் சென்றாலோ அல்லது காரில் சென்றாலோ பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக நினைப்போம். ஆனால், தற்போது லிப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் வரும்போது, என்னடா இது வாழ்க்கை என்று தோனுகிறது. ஆக எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதனை கொடுப்பதே அரசின் கடமை. இவ்வாறு பேசினார்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை லிப்டில் சிக்கி கொண்டதை சுட்டிக்காட்டியே தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு கிண்டலாக கூறியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.