வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். புதுக்கோட்டை ,கீரனூர், குளத்தூர் ,அன்னவாசல் ,இலுப்பூர் ,நார்த்தாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பிப்பர்.
நாளை அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் 11ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.