காயிதே மில்லத் 127வது பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை!

 
tn

காயிதே மில்லத்தின்  127-ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 127-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2022 - ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை , திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் | சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,. எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

ops eps

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கழக ஒருங்கிணைப்பாளர்,  கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.