'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத் பிறந்தநாள் - முதல்வர் மரியாதை!!

 
tn

காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

tn
‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் அவர்களின் 127-ஆவது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை வாலாஜா சாலையில் உள்ள பள்ளி வாசலில் உள்ள நினைவிடத்தில் மலப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் துரைமுருகன் , எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தித் திணிப்பு எதிர்ப்பு - தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி - மத நல்லிணக்கம் - சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் 'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.