ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு - முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு!!

 
tn

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து  முதியவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். 

tn

சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து கண்ணையன் என்ற 60 வயது முதியவர் ஒருவர் தீக்குளித்தார்.இதையடுத்து பலத்த காயங்களுடன் முதியவர் கண்ணையன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

tn

கண்ணையன் தீக்குளித்த தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புல்டோசரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு வருகை புரிந்தார்.

tn

அத்துடன் சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர்,இளங்கோ தெரு வீடுகள் இடிப்பு விவகாரம்  குறித்துமக்கள் கால அவகாசம் கேட்டுள்ளது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று மயிலை எம்எல்ஏ த. வேலு கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.