குரூப் டி தேர்வெழுத தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கீடு - அன்புமணி கண்டனம்!!

 
pmk

குரூப் டி தேர்வெழுத மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

exam

தமிழகத்தில் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 3,769 காலிடகை நிரப்ப குரூப் டி தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்வு வடமத்திய ரயில்வே, வடமேற்கு ரயில்வே , தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆகியோற்கான இரண்டாவது கட்டத் தேர்வு அல்லது 26 ஆம் தேதி முதல் தொடங்கி  நடந்து வருகிறது. தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே ,வடகிழக்கு எல்லை ரயில்வே கிழக்கு கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கு மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த  பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்; தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும்; மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் .