"என் அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
tn

காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எம்பியுமான ராகுல் காந்தி இன்று தனது 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும்,  தலைவர்களும் கொண்டாடி வருவதுடன், மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குகின்றனர். அத்துடன் கட்சி பாகுபாடின்றி பல்வேறு தலைவர்களும்  ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

“அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – தெற்கிலிருந்து பறந்த இரு வாழ்த்துகள்!

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு நபரின் உண்மையான வலிமையும், உறுதியும் கடினமான காலங்களில் தெரியும்.இந்த சோதனைக் காலத்தில் உங்களின் அர்ப்பணிப்பையும், தளராத துணிச்சலையும் நாடு காண்கிறது. நமது புகழ்பெற்ற குடியரசை மீட்டெடுப்பதில்  வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இன்று பிறந்தநாள் காணும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான இளம் தலைவர்  திரு ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.


கரூர் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 வருட கால காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் அவர் ஒருதுளியேனும், சமரசம் செய்து கொண்ட ஒரு நொடியை கூட நான் பார்த்ததில்லை. பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர். அவரைப் போலவே எங்களையும் தயார் செய்தார்.அவர் எங்கள் தலைவர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அமைதி, ஒருமைப்பாடு மற்றும் வளம் என இந்த நாட்டை அதன் அசலான சிறப்புகளை நோக்கி இட்டுச் செல்ல கூடிய மகத்தான தலைவர் அவர் மட்டுமே. தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! " என்று கூறியுள்ளார்.