இன்று 3 மாவட்டங்களில் மழை ...எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் !!

 
karur rain

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழக்கு சுழற்சியின் காரணமாக இன்று,தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி ,கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

13-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.