அடுத்த 3 மணி நேரத்திற்கு 'இந்த' 6 மாவட்டங்களில் மழை!!

 
rain

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழை வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அத்துடன் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் நீலகிரி கோவை திருப்பூரு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல்  தெரிவித்துள்ளது.  கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

rain

நாளை முதல் வருகிற 29-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் , அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.