அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை.. - வானிலை மையம் தகவல்..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், டிசம்பர் 20 ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தொடர்ந்து 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, டிசம்பர் 18 ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.