ராமநாதபுரம் மன்னர் ராஜா குமரன் சேதுபதி மாரடைப்பால் மரணம்

 
கு

ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன் சேதுபதி இன்று  மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

 ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இளைய மன்னரும்,  ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தக்காருமான ராஜா குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்துள்ளார்.

செ

 ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்த என்.  குமரன் சேதுபதி ,  ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு செனட் உறுப்பினர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்,  ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் இவர் வகித்து வந்துள்ளார்.

 ராமநாதபுரம் மன்னர்   குமரன் சேதுபதி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென் தமிழகத்தின் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியினை ஆட்சி செய்தவர்கள் சேதுபதிகள்.   வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும் பின்னர் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் சேதுபதிகள் ஆவர்.   சேது கரைக்கு அதிபதிகளாக திகழ்ந்ததால் இவர்கள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.