அடகுக்கடையில் துளையிட்டு ரூ.75 லட்சம் நகை கொள்ளை - வேலூரில் பரபரப்பு!
காட்பாடி அருகே நகர் அடகு கடை சுவரில் துளையிட்டு 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காடு கூட்டு ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். நேற்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், இன்று காலை மீண்டும் கடையை வந்து திறந்து பார்த்தபோது , அடகு கடைக்கு பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையில் சுவற்றில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி விசாரணை மேற்கொண்டதுடன், இதுகுறித்து திருவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நகை கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.