ரூ.20 செலவில் SMART CLASS வகுப்பறைகள் - அசத்தும் தமிழக அரசு!!

 
tn

திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பல மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதனால் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ள பள்ளி கல்வித்துறை,  தனியார் பள்ளிகளுக்கு நிகராக கற்பிக்கும் தன்மை மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.


tn

அந்த வகையில்  சைதை தொகுதியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான SMART CLASS வகுப்பறைகள் ரூ.20 லட்சம் செலவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார் . இவ்விழாவில் சென்னை மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

tn

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ரூ.12.39 லட்சத்தில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது;  தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது என்றார்.