அதிமுக பிரமுகர் படுகொலை - குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாறைகுளம் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கடந்த மார்ச் 25ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவராக பணியாற்றி வந்த இவர், சமூக ஆர்வலராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் திருச்சுழி மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்த சென்றபோது மர்ம நபர்கள், சத்தியமூர்த்தியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து திருச்சு ழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பாறைகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
முன்பகை காரணமாக சத்தியமூர்த்தியை செல்வகுமார் வெட்டி கொலை செய்தது இதன் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சுழியில் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்வகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.