மாணவி சத்யா கொலையில் தப்பியோடிய சதீஷ் கைது

 
ss


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷை தனிப்படை போலீசார் துரைப்பாக்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் .  இந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை பள்ளி பருவம் முதல் கொண்டு  காதலித்து வந்திருக்கிறார். கருத்து வேறுபாட்டினால் பின்னர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.  

ya

இந்த நிலையில் கல்லூரி மாணவியான பிறகு சத்யாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானதாக சதீஷ்க்கு தகவல் கிடைத்திருக்கிறது.  

 வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யா உடன் இதுகுறித்து சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.  அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயிலின் முன் மாணவி சத்யாவை தள்ளிவிட்டுள்ளார் சதீஷ்.   வேகமாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மாணவி சத்யா. இதை அடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிருக்கிறார்.

 தகவல் அறிந்த போலீசார் சத்யாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து  மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷை தேடி வந்தனர். இதற்கிடையில்,  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலையாளி சதீஷ் நுழையும் சிசிடிவி காட்சி வெளியானது.  

மாணவி கொலையில்  தேடப்பட்டு வந்த மாணவன் சதீஷை துரைப்பாக்கத்தில் ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.