இதில் எந்த தாமதமோ, தடையோ இருக்கக் கூடாது.. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை..

 
பள்ளிக்கல்வித்துறை

TC (மாற்றுச் சான்றிதழ்) வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் எந்த தாமதமோ, தடையோ இருக்கக் கூடாது..  பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை..

தமிழகத்தில் ஒன்று முதல்  10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று  (  ஜூன் 13 ஆம் தேதி)  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதற்காக கடந்த சில நாட்களாகவே, பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. முன்னதாக பள்ளிகள் திறந்த பின்னர்   மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.  அதில்,  “தொடக்கப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி TC (மாற்றுச் சான்றிதழ்)  வழங்கிட வேண்டும் என்றும்,   இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC  கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மேலும், TC வழங்கும் பணிகளை நாளையும், நாளை மறுநாளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் நாளைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8 ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,   பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் TC பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும்  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தவிர, RTE சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், உத்தரவிடப்பட்டுள்ளது.