தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம்

 
school


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.

அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37,391அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

school

இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.இந்தக் கூட்டத்துக்கு மாணவர்கள் வர வேண்டியதில்லை. அவர்கள் பெற்றோர் மட்டும் வந்தால் போதுமானது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 37,391 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு   கூட்டம் நடைபெற்றது.