அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு!

 
tn

அரசு பேருந்து மோதி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tn

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில் அரசு பேருந்து மோதியதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் லட்சுமி ஸ்ரீ  என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள். பள்ளிகள் .கல்லூரிகளில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

death

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் லட்சுமி ஸ்ரீ  என்ற மாணவி இன்று காலை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.  சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பின் சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாபுரத்தில் அரசு பேருந்து ஒன்று மாணவியின் மீது மோதியுள்ளது. இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். பொழிச்சலூர் -அஸ்தினாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த 52எச் அரசு பேருந்து மோதியதில் மாணவி உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய  அரசு பேருந்து ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.