இளைஞரின் செல்போன் சிக்னல் மூலம் பள்ளி மாணவி மீட்பு

 
sட்

காலையில் பள்ளிக்குச் சென்ற  பிளஸ் 1 மாணவி மாலையில் வீடு திரும்பாத நிலையில் போலீசாரின் உதவியுடன் தேடி வந்த போது கட்டிட மேஸ்திரி அம்மாணவியை  பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்திருக்கிறது.  மாணவியை மீட்டு கட்டிட மேஸ்திரியை போக்சோவில் கைது செய்துள்ளனர் போலீசார்.

 தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளியைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்திருக்கிறார். இவர் கடந்த நாலாம் தேதி அன்று பள்ளிக்குச் சென்று இருக்கிறார்.    காலையில் பள்ளிக்குச் சென்று அவர் மாலையில் வீடு திரும்பவில்லை.  

ட்ர்

 அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தொப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.   அப்போது தொப்பூர் அடுத்த சிவாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரிசிந்த்  என்கிற 21 வய்து இளைஞருடன் மாணவிக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது.

 கட்டிடம் மேஸ்திரி ரிசிந்த் செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில்,  சிக்னல் பெங்களூருவில் காட்டி இருக்கிறது.   இதை அடுத்து பெங்களூரு சென்ற போலீசார் அங்கே ரிஷிந்தை கைது செய்தனர்.   அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

 ஆசை வார்த்தைகள் சொல்லி மாணவியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரிஷிந்தை கைது செய்தனர் போலீசார்.