கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத தமிழ்நாடு...ஈபிஎஸ் கண்டனம்!!

 
eps

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் கிரேசி.  இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழுவூரில்  கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த ஆறுமுகம் என்பவர் திடீரென ஆய்வாளர் மார்க்ரெட் கிரேசியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பெண் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு  நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

tn

இதையடுத்து கத்தியால் குத்திய ஆறுமுகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேசி  வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஆறுமுகம் மது குடித்துவிட்டு பைக்கில் வந்ததால் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. 

tn

இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் 
இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.