எருமை கூடதான் கருப்பா இருக்கு! - யுவனுக்கு சீமான் பதிலடி

 
seeman

கருப்பா இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக தான் இருக்கிறது  எருமை திராவிடரா? என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

டாக்டர். சிவந்தி ஆதித்தனாரின் 9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது: பிரதமர் மோடி குறித்த இளையராஜாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. யுவன் சங்கர் ராஜா திராவிடன் என்பதை விட தமிழர் என்று சொல்ல வேண்டும். புகழ்ந்து பேசினால்  விருது கொடுப்போம் என்கிறார்களா ? அவரது தனிப்பட்ட கருத்து அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை.

seeman

  

திராவிடனா இரு  இல்லையென்றால் தமிழனா இரு ? ஏன் குழப்பம் ? தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள் , தமிழன் என்கிறீர்கள் , ஏன் இத்தனை முகமூடி ? யுவன் சங்கர் ராஜா சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை. கே.ஜி.எப்.யாஷ் கூட  நான் பெருமைமிகு கன்னடிகா என்கிறார். அதே போல பெருமைமிகு தமிழன் என்று மட்டும் சொல்ல  வேண்டியது தானே ? கருப்பா இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது, எருமை திராவிடரா ? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும். என்றார். 

yuvan-shankar-34


 இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா “நான் கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்’’ என்று தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு கருப்பு லுங்கி கருப்பு டீசர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடதக்கது.