"வங்கி, நிதித்துறை அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறை" - மதுரை எம்.பி. கோரிக்கை ஏற்பு!!

 
mp

வங்கி, நிதித்துறை அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பகவத் காரத்  உறுதியளித்துள்ளார்.

su venkatesan

எல்லா வங்கி,  நிதித்துறை அலுவலகங்களிலும் பெண்களுக்கு தனிக் கழிப்பறை வேண்டும் என்ற மதுரை எம்.பிசு.வெங்கடேசன்  கோரிக்கையை ஏற்று நிதி இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.அதில், வங்கி,நிதித்துறை அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

tn

இதுகுறித்து சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், பிப்ரவரி 8, 2022 அன்று மக்களவையில் விதி 377 அடிப்படையில் வங்கி மற்றும் இதர அலுவலகங்களில் பெண்களுக்கு தனிக் கழிப்பறை அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியிருந்தேன்.  அதற்கு பதில் அளித்து நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் காரத் எழுதியுள்ள கடிதத்தில் (D.O.F No 15/02/2022- Coord), இப் பிரச்சினை மீது வங்கிகள் - நிதித் துறை நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் அறிவுறுத்துவதாகவும், இது குறித்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி, எல்லா பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அனுப்ப வேண்டுமென்று பணித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.