மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - வணிகவியல் ஆசிரியர் சிறையிலடைப்பு

 
ட்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வணிகவியல் ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆர். எஸ். மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்.   56 வயதான ஜெயராமன் ஆண்டிமடம் அருகே இருக்கும் அய்யூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இந்தப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

ட்ர்

ஆசிரியர் ஜெயராமன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகள் பேசுவது,   பாலியல் ஆசையை தூண்டுவது போல் நடந்துகொள்வது,  மனைவிகளை சீண்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்.   இதுகுறித்து  மாணவிகளின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

 புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.