இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. ரூ.40,000 தாண்டியது தங்கம் விலை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக மார்ச் முதல் வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி, இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதன்பிறகு அடுத்த நாள் முதலே தங்கம் விலை குறைந்தது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக கடந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தும் வரும் தங்கம் இலை இன்றும் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்தது, தொடர்ந்து இன்றும் ரூ.80 அதிகரித்து மீண்டும் தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு 1, 500 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 40,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, ரூ.5,006-க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய தினம் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,996 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,968 க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 74 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.