“ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ்” - அதிமுக பொதுக்குழுவில் பெரும் பரபரப்பு!

 
tn

பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வெளியே போக சொல்லி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tn

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் சென்னை வானகரத்தில்  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ள நிலையில்,  அவருக்கு முன்னதாகவே புறப்பட்டஇணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் வருகை புரிய வில்லை.  காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 11மணியளவில் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வேண்டும் வேண்டும் ஒற்றை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வரும் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்களால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இருப்பினும்  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனர். ஈபிஎஸ் ஆதரவாளர்களின் முழக்கத்தால் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வளர்மதி கோரிக்கை  விடுத்துள்ளார்.