பிப்.22 ரயில்கள் ரத்து.. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!

 
ரயில்வே ரயில்வே

நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருசில ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில்வே பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அதன் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே (12711) காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

AK Agarwal takes additional charge as Southern Railway GM- The New Indian  Express

அதேபோல சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712) பிற்பகல் 2.10 மணிக்கு 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இவை தவிர நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே (06746)  காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்ைட- நெல்லூர் இடையே (06745) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன.

southern railway: Latest News, Videos and Photos of southern railway |  Times of India

சூலூர்பேட்டை- மூர் மார்க்கெட் இடையே (06742) பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே (06741) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி- மூர் மார்க்கெட் இடையே (66000) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட்- ஆவடி இடையே (6603) இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் பிப்ரவரி 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.