தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை!!

 
tn

 ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
 
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 24ஆம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்கள் கைது செய்தனர்.  அத்துடன் அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

fisher

அத்துடன் அவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.  மே 12ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  மீனவர்களுக்கு ஜாமின் வேண்டுமானால் மீனவர் ஒருவருக்கு  தலா ஒரு கோடி செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது .இந்த விவகாரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

tn

இந்நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.  கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்ட நிலையில் இலங்கை  ஊர் காவல்துறை நீதிமன்றம் 4 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ஊர் காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட நான்கு பேரும் ஒரு சில நாட்களில் தமிழகம் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.