மகாத்மா காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

 
tn

எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உத்தமர் காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

tn

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கெனவே காந்தியடிகளின் சிலை இருந்துவரும் நிலையில், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் மற்றொரு முழு உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

tn

சிலை திறப்பிற்கு பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.