பேருந்து நிலையத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்!

 
tn

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.  பேருந்துகளில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், Panic Button-ஐ அழுத்த வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

tn

பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில்  பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த MTC உடன் 2 நாள் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது. டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 4 இடங்களில் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

இன்று கோயம்பேடு மற்றும் பிராட்வே பஸ் டிப்போக்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தில் மாற்று ஊடக மையத்தின் தெரு நாடகம் நடத்தப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.