பஞ்சு ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து - ஒட்டப்பிடாரத்தில் பரபரப்பு!!

 
ttn

ஒட்டப்பிடாரம் அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

fire

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கே.கைலாசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்.  இவர் நாகர்கோவிலில் உள்ள நிறுவனத்திற்காக கோவையில் இருந்து நேற்று பஞ்சு மெத்தைக்கு தேவையான பஞ்சினை கொள்முதல் செய்து கொண்டு லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.  லாரியை ஓட்டி வந்த சுரேஷ்,  வெல்டிங் வேலை செய்வதற்காக லாரியை தனது நண்பர் மைக்கேலுக்கு  சொந்தமான வெல்டிங் கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.  அங்கு லாரியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. 

tn

அப்போது திடீரென லாரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லாரியில் பஞ்சு  இருந்ததால் மளமளவென தீ பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. ர் தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள்ளாகவே லாரி முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து நாரைக்கிணறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.