#BREAKING | ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் ஈபிஎஸ்க்கு ஆதரவு!!

 
tn

ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்து வந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

op
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுவடைந்து நிலையில் எடப்பாடிபழனிசாமிக்கான  ஆதரவு அதிகரித்துள்ளது . இதனால் ஓபிஎஸ் விரைவில் ஓரங்கட்டப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . இந்த சூழலில்  பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். அத்துடன் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கிய நிர்வாகிகளும் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளனர்.

ops

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.  இதுவரை மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து உள்ளார். நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , அதிமுகவில் தற்போது சர்வாதிகாரம் மற்றும் அராஜகப் போக்கு நடைபெற்று வருவதாகவும்,  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.