#Breaking "துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்" - ஜெயக்குமார் கடும் விமர்சனம்!!

 
jayakumar

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொது குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம் .  74 தலைமை கழக நிர்வாகிகளில்  65 பேர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பல முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.பண்ருட்டி ராமச்சந்திரன், புத்திச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்திற்கு வர முடியாது என்று கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றார்.

jayakumar

தொடர்ந்து பேசிய அவர், எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். . ஓ.பி ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு நடக்கிறது என்கிறார். இதை அதிமுக தொண்டன் ஏற்கமாட்டான். பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா, நீக்கப்படுவாரா என்பதை பொதுக்குழு முடிவு செய்யும் அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார்.துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் . துரோகம் அவர்களின் உடன்பிறந்த ஒன்று.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார் என்றார்.