தமிழகத்தில் கட்டுப்பாடின்றி இருக்கிறதா சட்டம் ஒழுங்கு? - அண்ணாமலை கேள்வி

 
annamalai annamalai

திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தில் 'லாக்கப்' மரணங்கள் தொடர் கதையாகி விட்டதாகவும், இந்த சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்புவதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற, 22 வயது இளைஞர் அஜித் என்பவர், அங்கு வைத்து சித்ரவதை செய்யப்பட்டு, மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த இளைஞனின் தாயின் வேதனையை போக்க இழப்பீடு மட்டும் போதாது. அறிவாலயம் அரசு அமைந்த நாள் முதல் தமிழகத்தில் 'லாக்கப்' மரணங்கள் தொடர் கதையாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.,டிக்கு உடனே மாற்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.