அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை - கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என, அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தமிழக ஆளுநரை சந்தித்தார். அப்போது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தபோது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்தார். இதற்கு ஆளும் திமுக அரசு மறுப்பு தெரிவித்தது. இதேபோல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். 

annamalai

இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார். டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதுபோன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார். மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்கு பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார். கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.