மே 21-ஆம் தேதி குரூப் 2, குரூப் 2A தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

 
tnpsc

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது அதில் பிப்ரவரியில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.

tnpsc3

இந்நிலையில்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 5,831 காலி பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தலைவர் பாலச்சந்திரன்  வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் மே.21ம் தேதி நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

TNPSC

அத்துடன் குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் , குரூப் 2 தேர்வில் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும். பொது அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்கள்,  நுண்ணறிவு கேள்விகளுக்கு 25 மதிப்பெண்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது . குரூப் 2 நிலையில் 116 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது,  குரூப்-2 ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி குரூப் 2 ,குரூப் 2 ஏ  தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.