விஸ்வா தீனதயாளன் மறைவு - ஈபிஎஸ் இரங்கல்!!

 
eps


தமிழக டேபிள் டென்னிஸ் வீரர்  விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு அதிமுக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn
83 வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக  தமிழக  டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன்  உள்பட 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சாங்பங்களா என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியுள்ளது.  இதில் கார் டிரைவர் மற்றும்  விஷ்வா தீனத யாளன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மற்ற மூவரும் பலத்த காயத்துடன் தற்போது சில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளம் வீரர் ஒருவர்  விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tn

இளம் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,   முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் திரு.விஸ்வா தீனதயாளன் அவர்கள் மேகாலயா மாநில சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.