கல்வி அமைச்சர்கள் மாநாடு - தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!!
குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது.
இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். அந்தவகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பொன்முடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
தேசிய கல்வி கொள்கை மற்றும் தேசிய அளவில் பாடத்திட்டம் மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.