"நல்லகண்ணு இருப்பு எளியோருக்கான பாதுகாப்பு" - திருமா, தினகரன் வாழ்த்து
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழகத்தின் முதுபெருந்தலைவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகளின் அம்பேத்கர்சுடர் விருதினைப் பெற்றுக் கொண்டு எமக்குப் பெருமை சேர்த்தவர். தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருபவர். விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியில் பெருமிதம் கொள்பவர். குறிப்பாக, என்மீது அளப்பரிய பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர். எப்போதும் எம்மைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துபவர். புரட்சியாளர் அம்மேத்கரின் கொள்கைகளைப் பரப்புவதற்கென ஒடுப்பட்டோர் உரிமை இயக்கத்தை உருவாக்கி தலித் மக்களுக்கிடையே பணுயாற்றி வருவபவர். அவருடைய இருப்பு எளியோருக்கான பாதுகாப்பு ஆகும். அவர் நூறாண்டுகளைக் கடந்து நோய்நொடியின்றி பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
முதுபெருந்தலைவர்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 26, 2022
தகைசால் தமிழர்
அய்யா நல்லகண்ணு அவர்கள்
நோய் நொடியின்றி நூறாண்டுகளுக்கும்
மேலாகப் பெருவாழ்வு வாழ
விசிக சார்பில்
நெஞ்சார வாழ்த்துகிறோம்.
அவரின் இருப்பு
எளியோரின் பாதுகாப்பு!@cpi @DRaja #HBDNallakannu pic.twitter.com/ixk86v5nlp
முதுபெருந்தலைவர்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 26, 2022
தகைசால் தமிழர்
அய்யா நல்லகண்ணு அவர்கள்
நோய் நொடியின்றி நூறாண்டுகளுக்கும்
மேலாகப் பெருவாழ்வு வாழ
விசிக சார்பில்
நெஞ்சார வாழ்த்துகிறோம்.
அவரின் இருப்பு
எளியோரின் பாதுகாப்பு!@cpi @DRaja #HBDNallakannu pic.twitter.com/ixk86v5nlp
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்த தலைவருமான பெரியவர் திரு.ஆர். நல்லக்கண்ணு அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இன்னும் பல ஆண்டுகள் அவர் மக்கள் பணியாற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.