தமிழ் புத்தாண்டியோட்டி சிறப்பு ரயில்கள்...முக்கிய அறிவிப்பு இதோ!!
தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வழக்கமாக பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக பண்டிகை காலங்களில், கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் வழக்கம். இது பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வருகிறது.
அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
புறப்படும் நேரமும் மறுமர்க்கமாக வந்தடையும் நேரமும்:-
ஏப்ரல் 13ம் தேதி - தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் : இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரையிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் அடையும்
ஏப்ரல் 17ம் தேதி - நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் - நாகர்கோவிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரையிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
வழித்தடங்கள்:-
தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வசதிகள் :-
1 ஏசி இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி
இரண்டு ஏசி மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்
13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,
நான்கு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்,
2 காப்பாளர் பெட்டியுடன் இணைந்த மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.