உங்கள் சொல்படியே நடக்கிறேன்...வென்றபடியே இருக்கிறேன் - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார்.
திமுகவின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்றார். அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தகைசால் தந்தையே!
— M.K.Stalin (@mkstalin) August 28, 2022
தன்னிகரற்ற தலைவரே!
முதல்வர்களில் மூத்தவரே!
கலையுலக வேந்தரே!
எங்களின் உயிரே! உணர்வே!
தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். (1/2) pic.twitter.com/gllWGZerbQ
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார். அந்த பதிவில், ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.