தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றக்கூடிய இயக்கம் திமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn cm

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ், தமிழர் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுதாகவும்,  அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் சரி என கூறினார். தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் இந்த திராவிட முன்னேற்ற கழக இயக்கம் என கூறினார். 

cm

உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத செயலை தமிழக அரசு செய்து காட்டி இருப்பதாக கூறினார். தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக திமுக எம்.பி, திருச்சி சிவா தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்துள்ளதாக பெருமிதம் எத்ரிவித்தார். 

cm

எனவே தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்.