ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் தாள் ஹால்டிக்கெட் வெளியீடு..

 
tet

 ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர்  தேர்வு வாரியம்  கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.  அதன்படி  இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த  நிலையில், அக்டோபர் மாதம் 14 முதல் 20 வரையில்  முதல் தாளுக்கு மட்டும்   முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி,  2022 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி  தேர்வின்  கணினி வழியில்  நடத்தப்படும் தாள்-I தேர்விற்கான கால அட்டவணையை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  மேலும், தேர்வு மையங்கள்  ஒதுக்கீடு  செய்யப்பட்ட மாவட்டங்களின் விவரங்களும்  வெளியாகியுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பயணர் எண் மற்றும் கடவுச் சொல்லை பதிவிட்டு  தங்களது   அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

   tet                                                          

தேர்வு  நடைபெறும் தேதி

அனுமதிச் சீட்டு - 1 

District Admit Card

அனுமதிச் சீட்டு -2

Venue Admit Card

14.10.2022    07.10.2022   11.10.2022
15.10.2022    07.10.2022   12.10.2022
16.10.2022  07.10.2022  13.10.2022 
17.10.2022  07.10.2022  14.10.2022 
18.10.2022  07.10.2022  15.10.2022 
19.10.2022  07.10.2022  16.10.2022 

  TET தேர்வு

மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட அனுமதிச் சீட்டு 1- ஐ (District Admit Card-I) தனியாகவும்,   தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) தனியாகவும் வெளியிடுகிறது.   www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், இந்தாண்டு கணினிவழித் தேர்வாக (Computer Based Examination) நடத்தப்படுவதால், பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும்,  தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  அதன்படி வரும் 12ம் தேதி முதல்  trbpracticetest என்ற போர்ட்டலில் பயிற்சித் தேர்வை தேர்வர்கள் மேற்கொள்ளலாம். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை மாற்றுவது தொடர்பாக எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.