வகுப்பறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் - ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்!!

 
tn

வகுப்பறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

dpi
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த 17ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது.  இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவிகள் முன்னிலையில் வகுப்பறையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

tn

அதில் முதல் கேக்  துண்டை  அப்பள்ளியின் தலைமை ஆசிரியை  மணிகண்டனுக்கு ஊட்டி விட்டுள்ளார்.  இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.  இந்த சூழலில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் இதுகுறித்து விசாரணை நடத்தி நிலையில்,  ஆசிரியர் மணிகண்டன் மற்றும் தலைமை ஆசிரியை இரண்டு பேரையும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.