சிகரெட் பிடித்த மாணவனை கண்டித்த ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - அன்புமணி அதிர்ச்சி
மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரை அடுத்த சேவூர் கிராமத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் முரளி என்ற மாணவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் மீது கடந்த 21 ஆம் தேதி மாலை சிகரெட் பிடித்து புகை ஊதியதாக தெரிகிறது. இதை மறுநாள் 22 ஆம் தேதி ஆசிரியர்கள் வெங்கட்ராமன் , திலீப் திலீப் குமார், நித்யானந்தம் ,பாண்டியன் ஆகியோர் அழைத்து விசாரித்துள்ளனர்.இதையடுத்து அந்த மாணவன் தனது பெற்றோருடன் அரசு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆசிரியர்கள் அடித்து விட்டார்கள், நெஞ்சுவலி என்று கூறி உள்நோயாளியாக அட்மிட் ஆகியுள்ளார். இதையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி மாணவனை அடித்துள்ளார்கள் என்று கூறி நான்கு ஆசிரியர்களில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், மற்றும் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது! பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல.... கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத் தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல; இது தவறான முன்னுதாரணமாகிவிடும்!
திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 27, 2022
திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகை விட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!(1/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 27, 2022
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர்மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும்... தொடரக் கூடாது! மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மற்ற இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அற நெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.