கோயில் நிலத்தை விற்று மோசடி : பாஜக நிர்வாகி கைது..

 
கைது


கோயில் நிலத்தை ரூ. 34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ரூ. 34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நகர தலைவர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகரைச்  சேர்ந்த ரங்கநாயகிக்கு கோயிலுக்குச் சொந்தமான 12.7 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி, சதீஷ் மற்றும் அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

மோசடி

நிலத்தை கிரயம் செய்வதற்காக ரங்கநாயகியிடம் சதீஷும், அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் ரூ.70 லட்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் விற்பனை செய்வதாக கூறிய நில ஆவணங்களை ஆய்வு செய்தபோது அது மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. கோயில் நில எஅன தெரியவந்ததி அடுத்து முன்பணமாக கொடுத்த ரூ. 70 லட்சம் பணத்தை திருப்பி தரும்படி ரங்கநாயகி கேட்டுள்ளார்.

பா.ஜ.க.

பணத்தை திருப்பி தர மறுத்த பாஜக நிர்வாகியின் தந்தையான பத்மநாபன் தான் ஓய்வுபெற்ற நீதிபதி என்று கூறி மிரட்டியுள்ளார்.  பணத்தை திருப்பி தர மறுத்ததால் பத்மநாபன் , சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் மீது ரங்கநாயகி போலீஸில் புகார் அளித்துள்ளார்.  விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகாரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து 6  பேரும்  உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியான சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.