தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விஜயகாந்த் அறிவிப்பு..
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து இன்று கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கழக தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தலைமைக் கழகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறுத்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் இயற்கை எய்திய தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்தல், மற்றும் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.