#BREAKING அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர்கள் கிழிப்பு!!

 
tn

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் இருந்த ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. பேனரில் இருந்த ஓ . பன்னீர் செல்வத்தின் படத்தை மட்டும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அதேபோல பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ.  பன்னீர் செல்வத்தை நீக்குவது தொடர்பாக விவாதிக்கபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் நீக்கிவிட்டு புதிய பொருளாளராக கே.பி. முனுசாமியை  நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

tn


இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர் .அதிமுக அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கோஷங்கள் எழுப்புவதுடன் எடப்பாடி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tn


இதனிடையே தேனியிலிருந்து ஓ.  பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.   அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ் . முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செல்லாது என்று அவர்  அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.